சனி, 14 மே, 2016

எச்சரிக்கை!

எச்சரிக்கை!
மறைமுகமாக நடக்கிறது மூன்றாம் உலகப்போர்!
"ஆரோக்கியம், அழகு, ஃபேஷன்"
காலையில் நீங்கள் பல் துலக்குவதில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை அனைத்துலும் மறைமுகமாக பல காலமாக ஏமார்ந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
எங்கோ செய்தியில் படித்து கூறியது போல இருந்த புற்றுநோய் இன்று அக்கம், பக்கத்து வீடுகளை வரை நெருங்கி விட்டது.
இன்று நாம் உண்டு வரும் பெரும்பாலான காய்கறி, பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை.
பணத்திற்காக, கொள்ளை லாபத்திற்காக நச்சு, இரசாயனப் பொருள் கலப்புள்ள விதைகள் விற்கப்படுகின்றன.
விவசாயத்தின் தோழனான தேனீக்கள் கோடிக்கணக்கில் இறப்பது ஏன்?
இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விளைந்த உணவுகளால் தேனீக்கள் அதிகளவில் இறக்கின்றன.
மேலும் இவை தான் மனிதர்கள் மத்தியில் புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
சரியாக ஒவ்வொரு முறையும் உலகநாடுகள் அவரவர் ஆண்டு பட்ஜெட், துறை சார்ந்த நிதி ஒதுக்கும் தருவாயில் ஏதேனும் ஒரு புதிய வைரஸ் சார்ந்த நோய்கள் பரவுவது / அதிகரிப்பது ஏன்?
முன்பெல்லாம் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால், இன்று நோயை கண்டுபிடித்து வளரும் மற்றும் ஏழை நாடுகளில் அதை பரவ செய்து மருத்துவ உலகம் பணம் சம்பாதித்து வருகிறது.
உண்மையில் கண்ணுக்கு தெரியாமல் நடந்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப்போர் இது தான்.
எங்கோ ஏதோ ஊரில், நண்பருக்கு தெரிந்தவரின் உறவினர் எவருக்கோ புற்றுநோய் என்று கேள்விப்பட்டு வந்தோம்.
ஆனால் இன்று ?
நமக்கே நேரடியாக தெரிந்தவர், நண்பர், ஏன் நம் வீட்டு நபருக்கே கூட புற்றுநோய் இருக்கிறது என்பது மிக சாதாரணமாக மாறி இருப்பதற்கு என்ன காரணம்?
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறி பழங்கள், தீய இரசாயனங்கள் கலப்பு செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் என நமக்கே தெரியாமல், நாம் பயன்படுத்தி வரும் இவற்றால் நாள்பட உடலில் புற்றுநோய் செல்களும், கட்டிகளும் உண்டாகின்றன.
20 வருடங்கள் முன்பு வரை சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய், ஆனால் இன்று?
பரம்பரையில் அனைவருக்கும் இருக்கும் நோயாக மாறிவிட்டது.
இதற்கு காரணம் சோடா பானங்களும், வெள்ளை சர்க்கரை பயன்பாடு, உணவுகளில் கலக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான்.
நாம் அனைவரும் அறிந்தது தான் இது.
ஆனால், பிறகு ஏன் இவை எல்லாம் முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை?
பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம் என நமது வீட்டு சமையல் பொருள்கள் மற்றும் இயற்கை தாவர மூலிகைகளை மருந்தாக உட்கொண்டு வந்த வரை நமது உடல் ஆரோக்கியமாக தான் இருந்து வந்தது.
ஆனால், இன்று?
ஆரம்பம் முதலே கரியும், உப்பையும் வைத்து தான் பல் துலக்கி வந்தோம்.
திடீரென பற்பசை பயன்படுத்துங்கள் என வெள்ளையாக ஒன்றை காட்டியவுடன் அதற்கு மாறினோம்.
பற்கள் பலவீனம் அடைந்தன, உடனே அதற்கென தனி ஸ்பெசல் பற்பசை.
ஒரு கம்பெனி பலவகை பற்பசை விற்று பெரும் லாபம் அடைகிறது.
நாம் பல் இழித்துக் கொண்டு நிற்கிறோம்.
இதற்கான முடிவு அரசாங்கத்தின் கையில் இல்லை.
நமது கையில் தான் இருக்கிறது.
நமக்கு இவ்வளவு கேடு விளைவிக்கும் பொருட்களை இனியும் வாங்கி பயன்படுத்த தான் போகிறோமா?
அல்லது இனியாவது நமது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது நல்லது என அறிந்து செயலப்பட போகிறோமா?
நாம் அனுபவித்து விட்டோம்.
இதை உங்களது குழந்தைகளுக்கும் பரிசளித்து விடாதீர்கள்.
"இச்செய்தியை அனைவருக்கும் பகிர்வோம்"
"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
"வந்தே மாதரம்"

கருத்துகள் இல்லை: