சனி, 14 மே, 2016

தயிரை இரவில் உண்ண கூடாது !!!


தயிரை இரவில் உண்ண கூடாது !!!
தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்து சாப்பிட உடல் புஷ்டியை தரும்.
உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் அது வயிற்றில் வேகமாக புளிக்க தொடங்கி பசியை குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
* மண் சட்டியிலிருந்து புரை குத்திய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.
* ஒருபோதும் தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.
* உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.
* தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் டம்ளர் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.
* தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
* பசியில்லாதவர்கள் புளிப்பு தலை காட்ட தொடங்கிய தயிரை சாப்பிட்டால் பசியை தூண்டும்.
* இரவில் குளர்ச்சியான தன்மையில் தயிரை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஜீரணக் குறைவு
ஏற்படும். அதனால் தான் தயிரை இரவில் உண்ண கூடாது என்கின்றனர்
============================================================
இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருசில உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். அப்படி உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரை பலரும் கோடையில் அதிகம் சாப்பிடுவோம்.
மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் நல்ல பாக்டீரியாக்களும் வளமையாக நிறைந்துள்ளது. எனவே தயிரை சாப்பிடுவதால், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.
ஆனால் அத்தகைய தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற மிகவும் பிரபலமான விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒருசில விதிமுறைகள் உள்ளன.
இருமல் மற்றும் சளி
சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது.
அது என்னவெனில், தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம்.
சர்க்கரை சேர்க்கலாம்
தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.
தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்
உங்களுக்கு தயிர் மிகவும் பிடிக்குமானால், அதனை பயமின்றி எந்நேரமும் சாப்பிட ஒருசில டிப்ஸ் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தயிரின் சுவையை ரசியுங்கள்.
* தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.
* மோர் போன்று செய்து குடிக்கலாம்.
இரவிலும் தயிர் சாப்பிட சில அடிப்படை விதிமுறைகள்
* வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம்.
* தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை: